பெர்லின்: ஜெர்மனியில் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ் போட்டியிட்டார். அவர் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பில் மெர்ஸ்க்கு 310 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 6 வாக்குகள் குறைவாக பெற்றதால் பிரெட்ரிக் மெர்ஸ் தோல்வியை தழுவினார். சில மணி நேரத்திற்கு பிறகு நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில் பிரெட்ரிக் மெர்ஸ் 325 வாக்குகளைப் பெற்று புதிய அதிபரானார்.
The post ஜெர்மன் புதிய அதிபரானார் பிரெட்ரிக் மெர்ஸ் appeared first on Dinakaran.