
லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இளம் வீரரானா ஜெய்ஸ்வால் மட்டும் முதல் இன்னிங்சில் 4 கேட்சுகளை தவறவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்,ஜெய்ஸ்வாலுக்கு இந்திய முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆதரவு தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறியதவாது,
இங்கிலாந்துக்கு முதல் சுற்றுப்பயணம் சென்று, ஒரு நல்ல ஸ்லிப் பீல்டராக மாறி, அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வது எளிதான காரியமல்ல. நீங்க எவ்வளவு வேணாலும் பயிற்சி செய்யலாம், ஆனால் போட்டியில் இது ரொம்ப சவாலானது. ரொம்ப குளிரா இருக்கும், அதனால விரல்கள் மரத்துப் போயிடும். பந்தை பிடிப்பது அவ்வளவு சுலபம் இல்ல.என தெரிவித்துள்ளார் .