
சர்வதேச சினிமா உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக, நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் சேர்வதற்கான அழைப்பைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!
மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.