"ஜெயிலர் 2" அப்டேட் கொடுத்த ரஜினி

5 hours ago 2

சென்னை,

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', விஜய்யின் 'பீஸ்ட்' ஆகிய படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கினார். இப்படம் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ்நாடு - கேரளா எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் நடந்தது. பின்பு கோயம்புத்தூரிலும் சில நாட்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கேரளாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

இந்நிலையில் கோழிக்கோட்டில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியை, விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம் கூலி, ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினி, " 'ஜெயிலர் 2 ' படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்று உறுதியாக சொல்ல முடியாது. பெரும்பாலும் டிசம்பர் ஆகிவிடும் என நினைக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது" என்று அப்டேட் கொடுத்துள்ளார்.

Read Entire Article