புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த நகைகளை ஒப்படைக்க கோரிய அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோரின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன இந்த நிலையில் ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
அதில் ‘‘மறைந்த தனது அத்தையான ஜெயலலிதாவின் நகைகளை தான், அவரது அண்ணன் மகளான தீபா கேட்கிறார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து நகைகளை தீபாவிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
The post ஜெயலலிதா நகைகளை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு appeared first on Dinakaran.