
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.
முதற்கட்டாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.