ஜாமீனில் வெளியே வந்த நிலையில் வெறிச்செயல் சாப்பிட அடம் பிடித்த பாட்டியை சுத்தியால் அடித்துக்கொன்ற பேரன்: மீஞ்சூர் அருகே பரபரப்பு

5 hours ago 4


பொன்னேரி: மீஞ்சூர் அருகே சாப்பிட அடம் பிடித்த பாட்டியை பேரன் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, பேரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி (85). மனநலம் குன்றிய நிலையில் இருந்த இவரை, மகள் பிரேமா குடும்பத்தினர் கவனித்து வந்துள்ளனர். சரஸ்வதியின் பேரன் பத்மநாபன் (23) மீஞ்சூர் காவல் நிலைய பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகிறார்.

மேலும், அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் கொண்டக்கரை மனோகரனை கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பத்மநாபன் மீது நிலுவையில் உள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான பத்மநாபன் அண்மையில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மூதாட்டி சரஸ்வதி மனநலம் குன்றிய நிலையில் அவ்வப்போது யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவதால் அவரை வீட்டின் வெளியே அமைந்துள்ள அறையில் உள்ள கட்டிலில் சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்து கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை திடீரென மூதாட்டி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், அவரது பேரன் பத்மநாபன் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து மூதாட்டிக்கு சாப்பிட சப்பாத்தி கொடுத்துள்ளார். அப்போது, சரஸ்வதி சாப்பிடாமல் அடம் பிடித்ததால் ஆத்திரமடைந்த பத்மநாபன் அங்கிருந்த சுத்தியலால் மூதாட்டியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த பேரன் சொத்துகாக கொலை செய்தாரா என்ற கோணத்தில் பத்மநாபனை கைது கொலை வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜாமீனில் வெளியே வந்த நிலையில் வெறிச்செயல் சாப்பிட அடம் பிடித்த பாட்டியை சுத்தியால் அடித்துக்கொன்ற பேரன்: மீஞ்சூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article