புதுக்கோட்டை: ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகியோரின் குவாரி கற்கள் இருந்த இடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 490 டாரஸ் லாரிகளில் குவாரி கற்களை பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். துளையானூரில் சட்டவிரோதமாக 490 லாரிகளில் குவாரி கற்களை பதுக்கி வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் வெளியானது. தகவலை அடுத்து ஆய்வு செய்ததில் கற்கள் பதுக்கியது தெரிய வந்ததை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.
The post ஜகபர் அலி கொலை வழக்கு: குவாரி கற்களை பதுக்கிய இடத்துக்கு சீல் appeared first on Dinakaran.