''சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்'' - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

2 hours ago 2

சென்னை: தமிழக அரசு, மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பே வெளியிடாமல் அமலுக்கு வந்தது. தமிழக அரசின் உத்தரவு அடிப்படை யில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மீண்டும் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்தியுள்ளன. வீட்டு வரி, தண்ணீர் வரி உயர்ந்துள்ளது.

Read Entire Article