சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்புக்கு எதிரான மறுஆய்வு மனு: தீர்ப்பை தள்ளி வைத்தது ஐகோர்ட்

5 months ago 15

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3.92 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்குப் பதியப்பட்டது.இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், அவரது சகோதரர் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Read Entire Article