“முக்குலத்தோர் வாக்குகளை பெறவே மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு” - திருமாவளவன் குற்றச்சாட்டு

3 weeks ago 7

மதுரை: “மதுரையை மையமாக வைத்து முக்குலத்தோர் வாக்குகளைப் பெறவும், அந்தச் சமுதாயத்தினரை வளைத்துப்போடும் நோக்கத்திலும் பாஜக, சங் பரிவார் அமைப்புகளால் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது,” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் மத நல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம், உலகத் தமிழ்ச் சங்கம் முன்பு இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர் அமீர், மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read Entire Article