கிருஷ்ணகிரி, பிப்.16: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கொட்டிலேட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி காஞ்சனா. இவர், கடந்த 13ம் தேதி இரவு குளிர் காய்வதற்காக வீட்டின் அருகே குப்பைகளை ஒன்றாக சேர்த்து தீ வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக காஞ்சனாவின் சேலையில் தீப்பிடித்தது. பின்னர், உடலுக்கும் பரவியது- இதில், உடல் கருகி படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, காஞ்சனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சேலையில் தீப்பிடித்து பெண் படுகாயம் appeared first on Dinakaran.