சேலம் மேற்கு மாவட்ட நாதக செயலாளர் விலகல்

2 months ago 8

சேலம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, யாருடைய கருத்தையும் கேட்பதில்லை, நான் சொல்றதை கேட்காவிட்டால் வெளியே போ என்று கூறி வருகிறார் என குற்றம்சாட்டி அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

கடந்த 18ம் தேதி சேலம் மாநகர் மாவட்டசெயலாளர் தங்கதுரை, 19ம் தேதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், 20ம் தேதி மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்தம் என அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

நேற்று சேலம் மேற்கு மாவட்ட நாதக செயலாளர் ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகியதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெகதீஷ் கூறுகையில், ‘கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை தலைமை கேட்பதில்லை. மாவட்ட நிர்வாகிகளை கேலி செய்து பேசுகிறார். சீமானின் செயல்பாடு சரியில்லாததால் கட்சியில் இருந்து விலகி உள்ளேன்’ என்றார்.

The post சேலம் மேற்கு மாவட்ட நாதக செயலாளர் விலகல் appeared first on Dinakaran.

Read Entire Article