சேலம் அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

5 hours ago 3

சேலம்: ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு வெடித்ததில் செல்வராஜ், கார்த்தி, தமிழ்ச்செல்வன், லோகேஷ் ஆகியோர் பலியாகினர்.

மேலும் இதுகுறித்து எடப்பாடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post சேலம் அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article