
சேலம்,
சேலத்தில் நாளை (25.04.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம் பின்வருமாறு:-
தும்பிப்பாடி துணைமின் நிலைய பகுதிகளான சிக்கனம்பட்டி, ஆர்.சி. செட்டிப்பட்டி ஒருபகுதி, கோட்டமேட்டுப்பட்டி, ஓமலூர் நகர், பெரமச்சூர், பனங்காடு, தாராபுரம், குண்டூர், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், மயிலாம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பெரியப்பட்டி, செம்மனூர், சாத்தப்பாடி, எம்.என்.ஜி.பட்டி, வாலதாசம்பட்டி மற்றும் காமனேரி.
தொப்பூர் துணைமின் நிலைய பகுதியான ஜோடுகுளி, தொப்பூர் ஒருபகுதி, நடுப்பட்டி, தளவாய்ப்பட்டி, நாச்சினம்பட்டி மற்றும் எலத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
நங்கவள்ளி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியசோரகை, சின்னசோரகை, குள்ளானூர், மல்லிகுட்டை, அரியாம்பட்டி, பூசாரியூர், ஆர்.ஜி.வளவு, சீரங்கனூர், சூரப்பள்ளி, அண்ணாநகர், குப்பம்பட்டி ஒருபகுதி ஆகிய பகுதிகள்.
கே.ஆர்.தோப்பூர் துணைமின் நிலைய பகுதியான முத்துநாயக்கன்பட்டி, கே.ஆர்.தோப்பூர், கோணகாபாடி, செம்மண்கூடல், கரியாம்பட்டி, கோவில்காடு ஆகிய பகுதிகளிலும்,
தாரமங்கலம் துணைமின் நிலைய பகுதிகளான துட்டம்பட்டி, தாரமங்கலம் நகர், ஆயமரத்தூர், தெசவிளக்கு மற்றும் சின்னப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தும்பல் துணைமின் நிலைய பகுதியான தும்பல், இடையப்பட்டி, இடையப்பட்டி புதூர், நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லோரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.
சிங்கபுரம் துணைமின் நிலைய பகுதிகளான புதுப்பாளையம், செல்லப்பா நகர், முத்தம்பட்டி, பார்பர் காலனி, மண் நாயக்கன்பட்டி, பெரிய கிருஷ்ணாபுரம், சின்ன கிருஷ்ணாபுரம், மத்தூர், கொட்டவாடி, ராமநாதபுரம், வேடுகத்தாம்பட்டி, தமையனூர், வைத்தியக்கவுண்டன்புதூர், மேட்டுடையார ்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.
உடையாப்பட்டி துணைமின் நிலையத்தில் மன்னார்பாளையம், அம்.பாலப்பட்டி, தில்லை நகர், புத்துமாரியம்மன் கோவில், வாய்க்கால் பட்டறை, செங்கல் அணை, அய்யனார் கோவில் காடு, வீராணம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.