சேலத்தில் சாரல் மழை

2 months ago 12

 

சேலம், நவ.18: சேலம் மாவட்டத்தில், கடந்த 3நாட்களாக மதியம் மற்றும் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9 மணி அளவில், சேலம் மாநகர பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. தொடர்ந்து 11 மணி வரை, சாரல் மழையாக தூரல் விழுந்து கொண்டே இருந்தது. இதேபோல், ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி பகுதியில் சாரல் மழை பெய்தது. அத்துடன் இதமான குளிர்காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வரும் நாட்களில் சேலம் உள்பட மேற்கு மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post சேலத்தில் சாரல் மழை appeared first on Dinakaran.

Read Entire Article