சேரன்மகாதேவியில் தபால் அலுவலக ஊழியர் வீட்டில் பணம் திருட்டு

2 months ago 10

வீரவநல்லூர்,நவ.16: சேரன்மகாதேவி பேரூராட்சி மாவடி மேலத்தெருவை சேர்ந்தவர் மந்திரி (58). வீரவநல்லூர் போஸ்ட் ஆபிசில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவ.13ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பின்னர் நேற்று வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் டிவி அருகே வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம் மாயமானது குறித்து சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குபதிந்த எஸ்ஐ முருகன் விசாரணை மேற்கொண்டதில் பணத்தை திருடியது அதே பகுதியை சேர்ந்த குட்டிராஜன் மகன் ஆகாஷ் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சேரன்மகாதேவி போலீசார் ஆகாஷை கைது செய்து பாளை சிறையிலடைத்தனர்.

The post சேரன்மகாதேவியில் தபால் அலுவலக ஊழியர் வீட்டில் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article