குன்னம் மே 16: அகரம்சீகூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைத்திட வேண்டியும், கழிவறை வசதி வேண்டியும், வெளி மாவட்ட ஆட்டோக்களை தடுத்து நிறுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டாண்ட் தலைவர் சந்திரகாசன் தலைமை தாங்கிய நிலையில், கருப்பையா, சின்னசாமி, இளம்பரிதி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்ட செயலாளர் அகஸ்டின் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் கருணாநிதி, கிருஷ்ணகுமார், மாவட்ட செயலாளர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post செவ்வாய்தோறும் படியுங்கள் அடிப்படை வசதிகள் வேண்டி சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.