சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பநர்கள் பணியிடங்களை, மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு,தேசிய நலவாழ்வுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநர் மருத்துவர் அருண் தம்புராஜ், அனைத்து சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை (டிபிஎச்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்), மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) ஆகிய இயக்குநரகங்களில் காலியாகவுள்ள செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்பநர் (3-ம் நிலை) பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கடந்த மே 21 மற்றும் ஜூன் 23-ம் தேதிகளில் துறைசார் கலந்தாய்வு கூட்டத்தை துறையின் செயலாளர் நடத்தினார்.