செல்போன் பார்த்ததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

2 weeks ago 2

 

திண்டுக்கல், ஜன. 18: திண்டுக்கல் அருகேயுள்ள கொட்டப்பட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் சந்தீப் (19). இவர் 8ம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது அவரது தாத்தாவுடன் சேர்ந்து சாக்கு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சந்தீப் அடிக்கடி செல்போனில் படம் பார்ப்பது மற்றும் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சந்தீப் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்பிரமணி, ஏட்டு நல்லுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன் பார்த்ததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article