செல்போன் திருடிய பெண் கைது

4 months ago 14

 

மதுரை, பிப். 23: மதுரை, திடீர்நகரை சேர்ந்தவர் மீனாட்சி(43). இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வியாபாரம் செய்ய வந்தபோது, பூக்கூடை மீது செல்போனை வைத்துவிட்டு கைகழுவிக்ககொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் செல்போனை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனை பார்த்த மீனாட்சி அவரை விரட்டிச்சென்றார்.

அவருக்கு உதவியாக, அருகில் பூ விற்பனை செய்யும் செல்வி மற்றும் மாரியம்மாள் ஆகியோரும் சென்றனர். அவர்கள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து திடீர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பெரியகருப்பு என்பவரது மனைவி வள்ளி(50) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வள்ளியை கைது செய்தனர்.

The post செல்போன் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Read Entire Article