கெங்கவல்லி, பிப்.13: ஆத்தூர் உடையார் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ரமேஷ்(25), இவர் பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில், செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். நேற்று காலை 10 மணிக்கு கடைக்கு வந்தபோது பூட்டு உடைபட்ட ஷட்டர் திறந்து கிடந்தது. உள்ளே கல்லாவில் வைத்திருந்த பணம், பழுது நீக்க வந்த செல்போன்களை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செல்போன் சர்வீஸ் கடையில் திருட்டு appeared first on Dinakaran.