ராமேஸ்வரம்: பாம்பன் புதிய தூக்கு பாலம் திறப்பு விழாவுக்குச் சென்றவர்கள் புதிய பாலத்தின் பின்னணியில் செல்ஃபி எடுக்க குவிந்ததால் பாம்பன் பாலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாம்பன் பதிய தூக்கு பாலத்தை திறப்பதற்காக இலங்கையிலிருந்து இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி மண்டபம் வந்திறங்கினார். பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பலர் வரவேற்றனர்.