செய்யாறு அருகே சொத்து தகராறு; சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோவால் பரபரப்பு

1 week ago 3

செய்யாறு, ஏப். 9: நெடும்பிறை கிராமத்தை சேர்ந்த ராஜி கடந்த 6ம் தேதி மாலை தனது தாயாரின் பெயரில் உள்ள நிலத்தை டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அங்கு வந்த ராஜியின் அண்ணன் குமார் சொத்தை பாகப்பரிவினை செய்யாமல் உழவேண்டாம் என தடுத்து நிறுத்தி, அவரிடம் வாக்குவாதம் நடத்தினார். மேலும் ராஜியின் மனைவி தடுக்க வந்தார். அவரையும் குமார் ஆபசமாக பேசி, தாக்குதல் நடத்தினர். இதனால் குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி ராஜி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் குமார் மோரணம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது தம்பியான ராஜி தன்னை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயர்ச்சித்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்த தம்பி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தள்ளார். இருதரப்பு புகார்களையும் காவல் துறையினர் பெற்றுகொண்டனர். இதற்கிடையே சொத்து தகராறு காரணமாக சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செய்யாறு அருகே சொத்து தகராறு; சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article