செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

2 days ago 5

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ்(88) கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் நிமோனியா பாதிப்பு என்று மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனால் 3 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

ஒருமாதத்துக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் நலம் பெற்று கடந்த மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார்.  இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவர், அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர் “அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துகள்” என தெரிவித்தார்.

 

The post செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை appeared first on Dinakaran.

Read Entire Article