செம்பனார்கோயில்,பிப்.25: செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சிறப்புலிநாயனாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. சோழமன்னர்களில் ஒருவரும், அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட்சோழ மன்னரால் அமைக்கப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இந்த கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
The post செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சிறப்புலிநாயனாருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.