சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் குடிநீர் ஏடிஎம்கள்

4 hours ago 2

சென்னை,

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் தொடங்க உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.

இதில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகைகளில் குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை பிடித்துப் பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் ஏடிஎம்கள் மூலம் பலரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article