சென்னையில் மழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 5 விமானங்கள்

2 months ago 9


சென்னை: சென்னையில் கன மழை காரணமாக, 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. மழை சிறிது ஓய்ந்த பிறகு அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டன. சென்னை விமான நிலைய பகுதியில், பலத்த மழை பெய்ததால் விமானங்கள் மிகுந்த பாதுகாப்புடன் தரை இறக்கப்பட்டன. ஓடு பாதையில் தண்ணீர் இல்லை என்பதை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உன்னிப்பாக கவனித்து விமானத்தை தரையிறங்க அனுமதி அளித்தனர். சென்னையில் தரையிறங்குவதற்காக, மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திருவனந்தபுரம், கோவை, ஐதராபாத், கொல்கத்தாவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானிலை வட்டமடித்து பறந்தன.

இந்நிலையில், அவ்வப்போது மழை சிறிது ஓயும்போது, ஓடு பாதையில் தேங்கிய தண்ணீர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு, விமானங்கள் தரையிறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து ஐதராபாத், டெல்லி, செகந்திராபாத், லக்னோ உள்ளிட்ட 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக இதுவரையில் 7 வருகை வருமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள் என 15 விமானங்கள் தாமதமாகின.

The post சென்னையில் மழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 5 விமானங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article