சென்னை: 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும்; 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக விரைந்து பேசி முடிக்க வேண்டும்;சென்னையில் அரசே இ-பேருந்து, மினி பேருந்துகளை இயக்க வேண்டும்; வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் மண்டல தலைமையகங்களில் ஏப்.21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பில் அறிவிக்கப்ப்டடது.