சென்னை: ஹுண்டாய் மோட்டார் நிறுவனம், சென்னை ஐஐடியுடன் இணைந்து, சென்னையில் ரூ.180 கோடியில் அமைக்கப்பட உள்ள பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தின் மாதிரி வடிவமைப்பை, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்.
தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024, சென்னையில் கடந்தாண்டு ஜனவரியில் நடத்தப்பட்டது. அதில், சென்னை ஐஐடி வழிகாட்டுதலின்படி ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மையம் இணைந்து, அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தை தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.