
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் 01.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை: குளக்கரை தெரு, மாரியம்மன் கோயில் தெரு, வடக்கு கட்டம் சிட்கோ 5 முதல் 7 வரை , பொன்னியம்மன் கோயில் 11 முதல் 13வரை, இபி சாலை 1 முதல் 4வரை, 2வது பிரதான சாலை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.