சென்னை: சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நேற்று நடைபெற்றது. சென்னையில் ஃபைனான்ஸ் தொழில் நடத்தி வருபவர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.
அந்த வகையில், சென்னை வடபழனி துரைசாமி சாலையில் உள்ள ஃபைனான்ஸ் நிறுவனம், வடபழனி வ.உ.சி சாலையில் உள்ள நிறுவனம், வேப்பேரியில் உள்ள ஃபைனான்ஸ் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு என 4 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.