சென்னையில் டிச.6-ம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன், விஜய் பங்கேற்பு

7 months ago 22

சென்னை: சென்னையில் டிச.6-ம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை 1999-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விசிக முன்வைத்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த செப்.12-ம் தேதி நிர்வாகிகளுடன் பேசும்போது, ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்தை திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த காணொலி, வெளிநாட்டு பயணத்தை முடித்து முதல்வர் தமிழகம் திரும்பிய நிலையில், திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நீக்கப்பட்டது சர்ச்சையானது. எனினும், இந்த கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என திருமாவளவன் உறுதிபட தெரிவித்திருந்தார்.

Read Entire Article