சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்ற 6 பேர் கைது

6 months ago 20
சென்னையில் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருட்களை விற்பனை செய்ததாக சூடான் நாட்டை சேர்ந்த நபர் உள்ளிட்ட 6 பேரை சேலையூர் போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து வந்த தகவலின் அடிப்படையில் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 28 இடங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். சூடான் நாட்டை சேர்ந்த முகமது அல்ஸ்மானே விசா காலம் முடிந்தும் சென்னையிலேயே தங்கியிருந்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article