
சென்னை,
சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை புறப்படும் 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி காலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரெயில் உள்பட 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி அருகே ரெயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே ரெயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை சென்று கொண்டிருந்த நெல்லை, குமரி விரைவு ரெயில்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் ரெயில்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.