சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோத மதுபான விற்பனை - குடியிருப்புவாசிகள் அவதி

2 months ago 10

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால், மதுகுடித்துவிட்டு ‘குடி’மகன்கள் செய்யும் அட்டகாசத்தால் டாஸ்மாக் கடைகளின் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட்டாலும், இரவு 10 மணிக்கு மேல் தான் ‘பிளாக்கில்’ மதுபான விற்பனைகளைகட்டுகிறது. சென்னையை பொறுத்த வரை, அம்பத்தூர், சூளைமேடு, பாடி, திருமுல்லைவாயல், கோடம்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Read Entire Article