சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

6 months ago 22

சென்னை: கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் இன்று (நவ.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

கனடா நாட்டில் கோயில்கள் மீதும், இந்து பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் எதிரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

Read Entire Article