சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,480 உயர்ந்து சவரன் ரூ.69,960க்கு விற்பனை செய்யப்படுகிறது அதன்படி, கடந்த 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் அதிரடியாக குறைந்து சற்று நிம்மதியை அளித்தது. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுமுகத்தை நோக்கி சென்றது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.185-ம், பவுனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து இருந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,560-க்கும், ஒரு பவுன் ரூ.68,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்றும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185-ம், பவுனுக்கு ரூ.1,480- உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.69,960- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,745 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,480 உயர்ந்து சவரன் ரூ.69,960க்கு விற்பனை appeared first on Dinakaran.