சென்னையில் அதி கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

7 months ago 23

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையை பொறுத்தவரை, நள்ளிரவு முதல் மதியம் வரை விடாமல் மழை கொட்டித்தீர்த்தது. மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரை குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்புள்ள மாவட்டங்கள்;

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article