சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்குகள் எத்தனை? - விவரம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

3 months ago 14

சென்னை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த அக்.4-ம் தேதி, சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான திருத்தணியைச் சேர்ந்த சுந்தர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அக்.9 அன்று சுந்தர் மரணம் அடைந்தார்.

Read Entire Article