சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்: 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் தகவல்

3 months ago 12

சென்னை: ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் பலத்த மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

The post சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்: 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article