‘சென்னை விமானப் படை சாகச நிகழ்வால் மாணவர்கள் ஊக்கம் பெறுவர்’- குரூப் கேப்டன் பரமன் நம்பிக்கை

2 hours ago 4

தாம்பரம்: 92வது இந்திய விமான படையின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள வான்சாகச நிகழ்ச்சி குறித்து தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தின் குரூப் கேப்டன் பரமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “92வது இந்திய விமான படையின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோலாகலமான அளவில் சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி மிகப்பெரிய வான்சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு முன்னர் 2003-ம் ஆண்டு 21 வருடங்களுக்கு முன்பு இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 72 விமானங்கள் மெரினா கடற்கரையில் 6-ம் தேதி, காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Read Entire Article