சென்னை: சென்னை விமான நிலைய பயணிகள் ஓய்வறையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழி இதழ்கள் புறக்கணித்துள்ளதாக திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டியுள்ளார். விமான நிலைய பயணிகள் ஓய்வறையில் இந்தி மொழி இதழ்கள், நூல்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தி திணிப்பில் ஈடுபடுவதாகவும், தமிழ் இதழ்களை பயணிகள் படிக்க எடுத்துச் சென்றதால் இந்தி இதழ்கள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் மழுப்புகின்றனர் என அவர் தெரிவித்தார்.
The post சென்னை விமான நிலையத்திலும் இந்தி திணிப்பு: திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.