சென்னை ரயிலில் ரூ.34 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

1 week ago 5

செங்கோட்டை: சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையை ரயில் கடந்த சென்ற நிலையில், இந்த ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக புனலூர் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உஷாரான ரயில்வே போலீசார், இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு பெட்டியில் இருந்த வாலிபர்கள் இருவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர். இதில் இருவரது கைப்பைகளிலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் மொத்தம் ரூ.34 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், தென்காசியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (35), விருதுநகரை சேர்ந்த பாலாஜி (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் ெசய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? என இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை ரயிலில் ரூ.34 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article