சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை மகளிருக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மகளிர் கவுன்சிலர்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் 7 பேர் மகளிர். மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவராக எம்.எஸ்.திரவியம் உள்ளார். அண்மையில் புதிய மாவட்ட தலைவர் நியமனம் மற்றும் விண்ணப்பம் விநியோகம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கு ஏராளமான மாவட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.