சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு

1 day ago 5

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 36 நாட்கள் கோடை விடுமுறைக்குப்பின் தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் காலையே பள்ளிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடப்பு ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6 ஆயிரம் மாணவ-மாணவியர் புதிதாக சேர்ந்தனர். ஆனால், நடப்பு கல்வியாண்டில் இதுவரை 16 ஆயிரத்து 490 மாணவ-மாணவியர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article