சென்னை பெரம்பூர் பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்

2 weeks ago 3

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமானது. சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் வரை செல்லும் மார்க்கத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் இயக்கம் தாமதமானது.

பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கும் இடையில் சிக்னலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில் சேவையில் குறிப்பிடப்பட்ட அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். வழக்கத்தை காட்டிலும் 20 முதல் 30 நிமிட தாமதமாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கபட்டது. சென்ட்ரலில் இருந்து பெரம்பூர் வழியாக ஆவடி, திருவள்ளூர் வரை இயக்கப்படும் அனைத்து ரயில் சேவையும் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்படுகின்றன. சமீபகாலமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய மார்க்கங்களில் இயங்கும் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பயணிகள் புகார் கூறிவந்த நிலையில் தற்போது சென்ட்ரல் – திருவள்ளூர் வழித்தடத்திலும் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

The post சென்னை பெரம்பூர் பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.

Read Entire Article