சென்னை புறநகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு; ரயில்கள் தாமதம்; ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தல்

2 hours ago 1

சென்னை புறநகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அந்த வகையில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

பொதிகை விரைவு ரயில், நெல்லை அதிவிரைவு ரயில், முத்து நகர் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள் தாமதம் ஆகியுள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாகியுள்ளது. பனிப்பொழிவு அதிகமாக உள்ள பகுதிகளில் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல கடும் பனிமூட்டம் காரணமாக, சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய டெல்லி, கொழும்பு, துபாய் உள்ளிட்ட 10 விமானங்கள் தாமதமாகியுள்ளது. பனிமூட்டம் காரணமாக, சென்னை வந்த மும்பை விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

The post சென்னை புறநகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு; ரயில்கள் தாமதம்; ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article