சென்னை: 3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணிக்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார். இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஆசிய உறுப்பு நாடுகளுடன் கப்பல் போக்குவரத்து சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் 4 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.