சென்னை: ராயப்பேட்டையில் சென்னை துறைமுக அதிகாரி வீட்டில் 28 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை முத்தையா 2வது தெருவை சேர்ந்தவர் ராமானுஜம். இவர் சென்னை துறைமுகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரமா எல்ஐசியில் காசாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் 9ம் தேதி இரவு தனது மகள் சவுந்தர்யா மற்றும் மருமகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் வீட்டின் கதவை சாத்திவிட்டு தூங்கினர். பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது.
உடனே பீரோவை ஆய்வு செய்தபோது, அதில் வைத்திருந்த 28 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது.இதுகுறித்து, ராமானுஜம் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் சென்னை துறைமுக உதவி மேலாளர் வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடு அமைந்துள்ள முத்தையா தெருவில் ெபாருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் கதவு உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் மாயாகி இருப்பதால் போலீசார் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை துறைமுக அதிகாரி வீட்டில் 28 சவரன் கொள்ளை: சிசிடிவி பதிவு மூலம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.